பாராட்டுவோம்....பார் போற்றிட....



அல்லாஹ்வின் குடும்பத்தை சேர்ந்த இனிமையானவர்களே!
 அஸ்ஸலாமு அலைக்கும்
           நாம் வாழும் இந்த நவயுகத்தில் முகநூல், வலைத்தளம் போன்ற கணினி யுகத்தில் சிறப்பான கருத்துக்கள், ஆச்சர்யப்படும் அரிய விசயங்கள் என பாராட்டப்பட வேண்டிய நிகழ்வுகள் பதியப்படுகிறது. பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
           இம்மாதிரியான செயல்களை இஸ்லாம் வரவேற்க்கிறதா? என சிலர் ஐயம் தெரிவிக்கிறார்கள். உலகிற்கு நல்ல பண்பாடுகளை அறிமுகப்படுத்திய இஸ்லாம், விமர்சனம் என்று சொல்லக்கூடிய மனம் திறந்து பாராட்டுதல், கருத்துக் கூறுதல் எனும் பண்பாட்டுக்கும் இஸ்லாமே முன்மாதிரியாக திகழ்கிறது.
           திருக்குர்ஆனையும், திருநபியின் சரித்திரத்தையும் ஆராய்ந்தால், அல்குர்ஆனும், அண்ணல் நபியும் விமர்சனம் (comment) நிகழ்த்தியிருப்பது நிறைய ஆச்சர்யத்தை அள்ளித்தருகிறது.

    சகாபாக்கள் பற்றி சத்திய வேதம்

           அண்ணலாரின் தோழர்களிடம் காணப்பட்ட சிறப்பியல்புகளை அல்லாஹ் மனம் திறந்து பாராட்டுவதை,

 مُّحَمَّدٌ۬ رَّسُولُ ٱللَّهِ‌ۚ وَٱلَّذِينَ مَعَهُ ۥۤ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَہُمۡ‌ۖ تَرَٮٰهُمۡ رُكَّعً۬ا سُجَّدً۬ا يَبۡتَغُونَ فَضۡلاً۬ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٲنً۬ا‌ۖ سِيمَاهُمۡ فِى وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِ‌ۚ ذَٲلِكَ مَثَلُهُمۡ فِى ٱلتَّوۡرَٮٰةِ‌ۚ وَمَثَلُهُمۡ فِى ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُ ۥ فَـَٔازَرَهُ ۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِہِمُ ٱلۡكُفَّارَ‌ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَـٰتِ مِنۡہُم مَّغۡفِرَةً۬ وَأَجۡرًا عَظِيمَۢا

48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.      என்ற இத்திரு வசனம் தெளிவு படுத்துகிறது. இது போன்று பல திருவசனங்களில் நாயகத்தோழர்களின் சிறப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றது. 

மாநபியின் மனம் திறந்த பாராட்டு 
 
           தனது தோழர்களிடம் காணப்பட்ட தனித் திறமைகளை மனம் திறந்து பாராட்டும் பண்பாடு பெருமானார் (ஸல்) அவர்களிடம் அழகுற மிளிர்ந்திருந்தது.
                ஹழ்ரத் காலித் (ரலி) அவர்களின் திடமான வீரத்தை இவர் அல்லாஹ்வின் போர் வாள்களில் சிறந்த போர் வாள் என விமர்சித்து இருக்கிறார்கள்.
                ஹழ்ரத் பர்ரா பின் மாலிக் (ரலி) என்ற தோழரின் இறைநம்பிக்கையை பாராட்டி நபி (ஸல்) அவர்கள், அலங்கோலமான சிகை, புழுதி படர்ந்த மேனி, முரட்டு ஆடை அணிகலன்கள் கொண்டவர். இவருக்காக யாரும் எதிர்பார்த்து நிற்க்க மாட்டார்கள். ஆனால் இவர் அல்லாஹ்வின் மீது ஒன்றை சத்தியமிட்டுக் கூறினால் அல்லாஹ் அதை நிறைவு செய்யாமல் இருப்பதில்லை. என்று அவரின் இறையாண்மையைப் புகழ்ந்து கூறினார்கள்.
ஒரு கவிஞர் எழுதுகிறார்,

ஊக்குவிற்ப்பவன் ஊக்குவித்தால்
ஊக்கு விற்ப்பவன்கூட தேக்கு விற்ப்பான்!

                ஆகவே அன்பர்களே! விமர்சியுங்கள். அப்பொழுதுதான் சாதாரண மனிதன்கூட சாதனை படைப்பான்.



0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com