அல்லாஹ்வின் அருள் நிறைக!
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்பான அல்லாஹ்வின் நல்லடியார்களே!
இந்த வலைத்தளத்தின் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தின் உயர்வான விசயங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்த அல்லாஹ்வைப் புகழ்ந்தவனாக அன்பான உள்ளங்களை சந்திக்கின்றேன்.
அல்லாஹ் தன் உயர்வான கலாம் ஷரீபில் சூரா ஆல இம்ரானில்,
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
இந்த ஆயத்தில் அல்லாஹ் தஆலா நன்மையானவைகளை எடுத்துச் சொல்லி, தீமைகளை கவனத்திற்க்கு கொண்டு வரக்கூடிய 'அழைப்பாளர்கள்' எப்பொழுதும் அல்லாஹ்வின் சமுதாயத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் கோடிட்டு சொல்கிறான்.
மார்க்க கல்வியை கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்ட என் போன்ற அல்லாஹ்வின் அடிமைக்கு நன்மையான விசயங்களை எடுத்துச் சொல்வது அவசியம் என உணர்கிறேன்.
இதன் மூலம் முழு முஃமினாக வாழ்ந்து மரணிக்க என்னை பக்குவப்படுத்திக் கொள்ளளாம் என்ற நிய்யத்தில் 'இன்னமல் அஃமாலு பின்னிய்யாத்'
என்ற கண்மனி ஸல்லல்லாஹூ(அலை)அவர்களின் முத்தான ஹதீஸை மனதில் நிறுத்தி உண்மை, உளத்தூய்மை இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் அனைவரையும் வலைத்தளம் என்ற சாதனத்தை சாதகமாக்கி சந்திக்கிறேன்.
மஅஸ்ஸலாம்!
0 கருத்துகள்:
Post a Comment