இறைவனின் அழைப்பு...இதயத்தின் இறப்பு



அன்பானவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!
             இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் அழைப்புஎனும் நிகழ்வை எதிர்கொள்ளக் கூடியவர்களாத்தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது.
             குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் அழைப்பு; பள்ளி பருவத்தில் ஆசானின் அழைப்பு; திருமணத்திற்க்குப் பிறகு ஆணாக இருந்தால், மனைவியின் அழைப்பு, பெண்ணாக இருந்தால் கணவனின் அழைப்பு; நாம் எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ, அத்துறையின் மேலாளரின் அழைப்பு இப்படி எந்த நேரமும் நம்மை யாராவது அழைக்கப் படுபவராகத்தான் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையின் ஆரம்பமே ஆரம்பிக்கின்றது.
             ஜனனம் எனும் பிறப்பு நிகழ்ந்து விட்டால், மரணம் எனும் இறப்பு நம்மை எந்த நேரத்திலும் அழைக்கும்.
             எப்படி தான் சார்ந்த துறையில் தன் மேலாளர் எந்த நேரத்திலும் அழைக்கலாம் என்று, அதற்கு தகுந்த தயாரிப்புகளை தயார் செய்து முன்னெச்செரிக்கையுடன் தத்தமது வேலைகளில் குறை நிறைகளை சீர் செய்து தெளிவாக மகிழ்ச்சியாக எதிர் கொள்கிறோமோ, அதைப் போன்றே, தன் எஜமான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழைப்பை எதிர்கொள்ளக் கூடிய தயார் நிலையில் உள்ளத்தையும், வாழ்க்கை நடைமுறைகளையும் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்.
             இறப்பு எனும் இறைவனின் அழைப்பு நமக்கு  இழப்பு அல்ல, உயிரின் இடமாற்றம் என்பதை அல்குர்ஆனும், அண்ணல் நபியின் அறிவிப்பும் நமக்கு அறிவுறுத்துகின்றன.


ٱلَّذِى خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ 
أَحۡسَنُ عَمَلاً۬‌ۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ 

67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

             உயர்ந்தோன் அல்லாஹ் உடலை படைப்பதற்க்கு முன்பே உயிரை படைத்து “ஆலமே அர்வாஹ்” என்ற சூட்சும உலகில் வாழ்ந்து வருமாறு செய்து கொண்டிருந்ததாக நபிகளின் ஹதீஸ் நினைவுறுத்துகிறது.
             “எல்லா உயிர்களும் பெரும்பட்டாலங்களாக குழுமியிருந்தன; அப்பொழுது பரிச்சயமானவை, இப்பொழுதும் அறிமுகமகி வாழ்கின்றன. அப்பொழுது அறிமுகமில்லாதிருந்தவை, இப்பொழுதும் சந்திக்காமலேயே வாழ்கின்றன,” என நபிகள் (ஸல்)
அவர்கள் உயிர்களின் உலகத்தை விளக்குகிறார்கள். (முஸ்லிம்)
             ஆம் அன்பர்களே, இறப்பு என்னும் அழைப்பு இடமாற்றம் தான். தான் செய்யும் தொழில் இடம் மாறினால் பதவி, ஊதியம், மரியாதை எல்லாம் உயர்வது (promotion) போல் இறப்பு எனும் இடமாற்றம் அல்லாஹ்வின் அருட்கொடை!!!
             மரணம் அல்லாஹ்வின் அருட்கொடை என்பதை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்! மஅஸ்ஸலாம்!
        

0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com