நிர்வாகம்




 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்,
                                           "அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் ஒவ்வொருவரும் நிர்வாகம் செய்பவராகவே இருக்கிறீர்கள்.
                      உங்களின் நிர்வாகம் பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள்."
                            நாட்டின் தலைவர் அந்நாட்டு மக்களின் நிர்வாகி.
                            தனி மனிதன் தன் குடும்பத்தின் நிர்வாகி.
                            ஒரு பெண் தன் கணவரின் உடமைகளுக்கும், குழந்தைகளுக்கும் நிர்வாகி.
                            வேலைக்காரன் முதலாளியின் உடமைகளுக்கு நிர்வாகி.
                                     உங்களில் ஒவ்வருவரும் நிர்வாகம் செய்பவர்களே! அது பற்றியும் நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள்.        (நூல்; புகாரி)
                               இந்த ஹதீஸில், ஜனநாயகம்(அரசியல்), பெண்ணின் சிறப்பு, தொழிலாளியின் கடமைகள் பற்றிய ஆழமான கருத்துக்களும், அழகிய தீர்வுகளும் அடங்கியுள்ளது.
                             ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைவர் தன் நாட்டு மக்களுக்கு தேவையான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அடிப்படை தேவைகள் மற்றும் அந்நாட்டு மக்களின் பாதுகாப்பு இப்படி அனைத்திலும் கவனமாக நிர்வகிக்க வேண்டும்.
                            தனி மனிதன் தன் குடும்பத்தையும், ஒரு பெண் தன் கணவனின் உடமைகளையும், குழந்தைகளையும் நிர்வாகம் செய்யக்கூடிய பொறுப்பைப் பெற்றுள்ளனர்.
                         முதலாளியின் கடமையைக் குறிப்பிட்டு கண்டிப்புடன் பிரத்தியேகமாக கூறிய நபிகளார் (ஸல்) அவர்கள்,
                           தொழிலாளியை பாதுகாவலராக, முதலாளியின் உடமைகளை நிர்வகிக்க கூடியவர் என்ற உயர்வான அந்தஸ்தையும் தொழிலாளிக்கு கொடுத்துள்ளார்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்ச்செயல்களுடன் கூடிய நல் வாழ்வைத் தந்தருள்வானாக! ஆமீன்!

0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com